கவிதை • வெறி


{வெறி}

அருளேறிய கடியில் 
துண்டமாகவுள்ள சேவலுக்கு
அரிசியள்ளி வைக்கிறாள் 
பட்டுச்சிறுமி.
மயானக்கொள்ளையின்
அங்காளம்மனாகத் தெரிந்த
அவளின் முன்னால் 
ரத்த வாயுடன் 
கும்பிட்டு உருள்கையில்
சேவலின் 
துடிக்கும் கொண்டையெடுத்து
எனைக் கொத்தவிடுகிறாள்.


{முத்துராசா குமார் ` நிழற்படம் ` Sarathi Thamodaran ` நன்றிகள் ` சீர் இதழ்}

Comments