கவிதை
ப்ளாட்டு புதர்களின்
துத்திப்பூக்களில் தொங்கும் தீட்டுத்துணிகளை
வாரிக்குவித்து எரிக்கின்றனர்
எனது வீட்டின் தலைமுறை ஆண்கள்.
சொக்கப்பனையாய் சடசடக்கும்
அந்நெருப்பின் புகை
கண்களை மறைக்கிறது.
வாடை மூச்சடைக்கிறது.
நேற்றைய இரவின்
இந்த சொப்பனம்
எதுக்கான சகுனம்.
••
{முத்துராசா குமார் ` படம் ` Suba ` நன்றி ` தமிழ்வெளி இதழ்}
Comments
Post a Comment