எழுச்சித் தமிழர் இலக்கிய விருது • கங்கு
'எழுச்சித்தமிழர் இலக்கிய விருது 2023' • 'கங்கு' நாவல்
இளவந்திகை திருவிழாவில் சிறந்த நாவலுக்கான எழுச்சித்தமிழர் இலக்கிய விருதினை நாடாளுமன்ற உறுப்பினர், முனைவர் தொல்.திருமாவளவன் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொண்ட தருணம் மனதுக்கு நிறைவான மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விடுதலைக் கலை இலக்கியப் பேரவைக்கும், கங்கினை வெளியிட்ட சால்ட் பதிப்பகத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும், அன்பும்.
தோழர் திருமா அவர்கள் முன்பு கவிஞர் யாழன் ஆதி அவர்கள் 'கங்கு' நாவலிலிருந்து சில பகுதிகளை மேடையில் வாசித்த போதும் எனது ஏற்புரையின் போதும் கடந்தகால வடுக்கள் - நிகழ்கால இருப்புகள் - மானுடம் - மதுரை நிலம் - தென்கரை கிராமம் - தொல். திருமாவளவன் - விசிக - கங்கு .... என மனதில் நிறைய நிறைய சித்திரங்கள் தேன்ராடாய் மொய்த்தன. உழுநிலம் கீறுகையில் மேல்மண் அடியிலும் கீழ்மண் மேலேயும் இடம் மாறி புழுபூச்சிகள் பொங்கி சுனையாகி வெளியேறுமே, அப்படியான மனதோடுதான் என்னால் பேச முடிந்தது. சில நிமிடங்களிலேயே உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்.
எல்லோருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளும் அன்பும்!
♥📝
பிப் 28-2024
Comments
Post a Comment